WhatsApp Channel
மக்களுக்காக உழைக்க அ.தி.மு.க. தான் சரியான இடம் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது என்றார் நடிகை கவுதமி.
பா.ஜனதாவின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பதாகவும், கட்சியில் தனக்கு ஆதரவு இல்லை என்றும் கூறி கடந்த அக்டோபர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகினார் நடிகை கவுதமி. இந்த நிலையில் அ.தி.மு.க. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடிகை கவுதமி இன்று அதிமுகவில் இணைந்தார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின், நடிகை கவுதமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“மக்களுக்காக உழைக்க அ.தி.மு.க தான் சரியான இடம் என்று எனக்கு நம்பிக்கை வந்துள்ளது.சுமார் 25 வருடங்கள் பா.ஜ.கவில் இருந்த நான் சில காரணங்களால் அக்கட்சியில் இருந்து சில நாட்களுக்கு முன்பு விலகிவிட்டேன்.
ஆனால் சரியான காரணங்களுக்காகவும், சரியான நேரத்திலும் இன்று அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன். அண்ணன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டால் நான் வேலையில் இறங்குவேன் என்பது உங்களுக்குத் தெரியும். இதுவரை அரசியலில் எனது செயல்பாடு அப்படித்தான் இருந்தது. இனிமேலாவது தீவிரமாக வேலை செய்ய சரியான இடம் கிடைத்துவிட்டது என்று நம்புகிறேன்.”
இவ்வாறு நடிகை கவுதமி கூறினார்.
Discussion about this post