WhatsApp Channel
காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவல்களுக்கு விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி விளக்கம் அளித்துள்ளார்.
விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி, கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைகிறார் என்ற தகவல் வெளியானது.
கன்யாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வசந்தகுமார் கொரோனாவால் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடைபெற்றது. அப்போது அந்த தொகுதியில் விஜயதாரணி போட்டியிட்டு காங்கிரசில் வாய்ப்பு கேட்டதாக தெரிகிறது.
கன்யாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வசந்தகுமார் கொரோனாவால் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடைபெற்றது. அப்போது அந்த தொகுதியில் போட்டியிட காங்கிரசிடம் விஜயதாரணி வாய்ப்பு கேட்டதாக தெரிகிறது.
ஆனால் கட்சித் தலைவர் விஜயதாரணிக்கு வாய்ப்பளிக்காமல், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு வாய்ப்பு கிடைத்து அவரும் வெற்றி பெற்றார். அன்றிலிருந்து விஜயதாரணி காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜயதாரணிக்கு இம்முறையும் எம்பி சீட் கிடைக்காது என்று கூறப்பட்டதால் தமிழகம் வரும் பிரதமர் மோடி முன்னிலையில் விஜயதாரணி பாஜகவில் இணைவார் என கூறப்பட்டது. இந்நிலையில் இன்று பாஜக தேசிய குழு கூட்டம் நடைபெறுவதால் விஜயதாரணி பாஜகவில் இணையவுள்ளதாக கூறப்பட்டது.
இதற்கு விஜயதாரணி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்தார். பாஜகவில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றார். தற்போது பாஜகவில் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று மறுத்துள்ளார்.
இதுவரை நடந்தது என்ன:
2016 சட்டசபை தேர்தலின் போதும் விஜயதாரணி அதிமுகவுக்கு தாவுகிறார் என்ற செய்தி பரவியது. அதேபோல் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு செல்கிறார். அப்போது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விஜயதாரணி சந்தித்ததால், ஊகங்களுக்கு கட்டுக்கடங்காமல் போனது.
ஆனால், விஜயதாரணி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏ ஆனார். அதேபோல், 2021-ம் ஆண்டிலும் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணிக்கு விளவங்கோடு தொகுதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அவர் பாஜகவில் இணைவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விஜயதரணி மறுப்பு:
இந்த நிலையில் விஜயதாரணி இதை திட்டவட்டமாக மறுத்தார். இந்நிலையில்தான் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கன்யாகுமரி தொகுதியை விஜயதாரணிக்கு வழங்க மறுப்பதாகவும், இதனால் அவர் தொடர்ந்து அதிருப்தியில் இருப்பதாகவும், பாஜகவுக்கு தாவப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் வழக்கம் போல் விஜயதரணி இந்த உத்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Discussion about this post