WhatsApp Channel
பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் மக்கள் குடும்பமாக கலந்து கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மன் என் மக்கள் நிறைவு யாத்திரை திருப்பூரில் தொடங்கியது. அதன்பின் அவர் கூறியதாவது:-
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை அறியும் மக்களவைத் தேர்தல் இது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதால் மக்கள் அனைவரும் குடும்பமாக கலந்து கொள்ள வேண்டும்.
வேல் யாத்திரை பா.ஜ.க.வுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்தது போல், என் மண் என் மக்கள் யாத்திரை 40 எம்.பி.க்களை கொடுக்கப் போகிறது என்றார்.
Discussion about this post