WhatsApp Channel
லோக்சபா தேர்தலில் ஓபிஎஸ் அணி விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அறிவிப்பை ஓபிஎஸ் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பார் என்று தெரிகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. அதாவது அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, திமுக கூட்டணி, நாம் தமிழர் (தனி) ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
இதில் திமுக, அதிமுக கூட்டணி பிரிவுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் ஓபிஎஸ் அணி பாஜகவுடன் கூட்டணி என அறிவித்திருந்தது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொதுக்கூட்டங்களில் ஓபிஎஸ் பங்கேற்றார்.
இந்த நிலையில், சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ்-க்கு ஒரே ஒரு சீட் கொடுக்க பாஜக சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், அதுவும் தாமரை சின்னத்தில் போட்டியிடுவது என்றும் தெரிகிறது. மேலும் தேனி தொகுதியை பாஜக தர மறுத்ததாக தெரிகிறது. மேலும் ஓபிஎஸ் தாமரை சின்னத்தில் போட்டியிட விரும்பவில்லை.
அவரும் எப்படியும் இரட்டை இலை சின்னத்தை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் உள்ள 4 கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன என்றார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
போட்டியிடும் 39 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளிலும், பாமக 10, அமமுக 2, தமாகா 3, ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம், ஏசி சண்முகாவின் புதிய நீதிக்கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆக மொத்தம் 39 தொகுதிகள் பாஜக கூட்டணியில் ஹவுஸ் புல் ஆகிவிட்டது. ஓபிஎஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள இழுபறி குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, விரைவில் ஓபிஎஸ் அறிவிப்பார். ஓபிஎஸ் பேட்டிக்கு பிறகு எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பதை அறிவிப்போம் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் விரைவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திப்பார் என்று தெரிகிறது. தேர்தலில் போட்டியிடாவிட்டால் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது குறித்தும் அவர் அறிவிப்பார் எனத் தெரிகிறது. ஓபிஎஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தை அவரது ஆதரவாளர்கள் சிலர் புறக்கணித்ததாக தெரிகிறது.
Discussion about this post