WhatsApp Channel
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் புகழேந்தி புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அதை நோக்கி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தைப் பொறுத்த வரையில் திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி. தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை தங்களுக்குத்தான் கிடைக்கும் என்றும் ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து கூறிவருகிறது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை ஓபிஎஸ் சமீபத்தில் உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதனிடையே தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் புதிய மனு ஒன்றை அளித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி அதிமுக படுதோல்வியை சந்திப்பதை செயல்வீரர்கள் விரும்பவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் சார்பில் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
Discussion about this post