WhatsApp Channel
நான் வெற்றி பெற்றால் மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் கடகோடி மக்களுக்கு கிடைக்க பாடுபடுவேன் என்றார் ராதிகா.
விருதுநகர் மணிக்கூண்டு பகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காமராஜர் பிறந்த மண்ணில் பிரச்சாரம் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இவ்வளவு நாள் தீவிர அரசியலுக்கு வரவில்லை. இப்போது என்னால் 100 சதவீதம் நேரத்தை ஒதுக்க முடிகிறது, உங்களால் முடியும் என்று என் கணவர் எனக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார். நான் அதை நம்புகிறேன், உங்களுக்காக 100 சதவீதம் பாடுபடுவேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன். உங்கள் சகோதரியாக, நான் உங்களுக்காக பாடுபடுவேன். பிரதமர் மோடி மீண்டும் பிரதமராவார். நான் வெற்றி பெற்றால் உங்களுக்காக அவரிடம் சொல்லி உங்கள் குறைகளை போக்க பாடுபடுவேன். நான் இங்கே பராலி சாலையில் இருக்கிறேன். நான் இங்கிருந்து செயல்படுவேன். 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஊழல் புகார் உள்ள அமைச்சர் யார்? இங்கு மாநிலத்தில் அமைச்சர்கள் சிறைக்கு வந்து செல்கின்றனர், அம்மா வீடு போல் வந்து செல்கின்றனர்.
அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். ஆனால் அந்த திட்டங்கள் சிலருக்கு மட்டுமே கிடைக்கும். சிலருக்குப் புரியவில்லை. நான் வெற்றி பெற்றால் மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் கடக்கோடி மக்களுக்கு கிடைக்க பாடுபடுவேன். தாமரைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
அவர் கூறியது இதுதான்.
Discussion about this post