WhatsApp Channel
கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி தாரை வார்த்து கொடுத்தது குறித்த புதிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கச்சத்தீவு குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி.
அதில், கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி தாரை வார்த்து கொடுத்தது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் ஒவ்வொரு இந்தியரையும் கொதிப்படைய வைத்துள்ளது.
காங்கிரசை நம்பவே முடியாது என்பது மக்கள் மனதில் இன்னொரு விஷயமும் உறுதியாகிவிட்டது.
75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.
Discussion about this post