WhatsApp Channel
இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் 44வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கம் முதலே பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக ரன் குவித்தனர். அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது. பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களும், ஜோ ரூட் 60 ரன்களும், பேர்ஸ்டோவ் 59 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹரிஷ் ரஃப் 3 விக்கெட்டுகளையும், முகமது வாசிம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஷஹீன் அப்ரிடி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்குகிறது. இந்த இலக்கை அந்த அணி 6 ஓவர்களுக்குள் எட்டினால் அரையிறுதிக்கு முன்னேறலாம். இதனால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு முற்றிலும் பறிபோனது. இதேவேளை இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு இலகுவாக தகுதி பெற்றுவிடும். இரு அணிகளும் வெற்றியுடன் தொடரில் இருந்து வெளியேற விரும்புவதால் இப்போட்டி பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Discussion about this post