WhatsApp Channel
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 7 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. 18 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை ஆளும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இந்த மோதலின் உச்சக்கட்டமாக கடந்த மாதம் 7ம் தேதி காசா பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழித்து விடுவோம் என்ற கோஷத்துடன் காஸா மீது தாக்குதல் நடத்தியுள்ளது. காஸா மீதும் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான போரில் இருந்து காஸாவில் 11,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் சுற்றி வளைப்பு மற்றும் காசா நகரத்தின் மீதான தாக்குதலால் காஸாவில் மனிதாபிமான நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான உணவு, குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கும் சூழல் உள்ளது. ஆனால் இஸ்ரேல் ராணுவம் முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இஸ்ரேலிய இராணுவத்தின் தரைவழித் தாக்குதலால் காசா முற்றிலும் நிலைகுலைந்தது.
காசாவை ஆக்கிரமிக்கும் திட்டம் எதுவும் தங்களுக்கு இல்லை, ஆனால் காசாவுக்கு சிறந்த எதிர்காலத்தை கொடுக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறுகிறது. இந்நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேலின் செயல்பாடுகளை கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 7 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. 18 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய தீர்மானம் வலியுறுத்தியது. இந்தத் தீர்மானத்தில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்த நிலையில், இப்போது இஸ்ரேலைக் கண்டிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
Discussion about this post