WhatsApp Channel
சென்னை தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடந்த 3 நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகையை கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். பேருந்துகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த வகையில் கடந்த 9ம் தேதி முதல் வழக்கத்தை விட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1,895 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்கள் (சனி, ஞாயிறு, திங்கள்) விடுமுறை என்பதால், ஏராளமானோர் முன்பதிவு செய்தும், முன்பதிவு செய்யாத பஸ்களிலும் சென்னையில் இருந்து முன்கூட்டியே பயணம் செய்தனர். இதனால் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம் உள்ளிட்ட 6 பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
குறிப்பாக, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். இதனால் சென்னை தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடந்த 3 நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையான இன்று சென்னை தாம்பரம் சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
Discussion about this post