WhatsApp Channel
பிரதமர் மோடி ஆண்டுதோறும் பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடி வருகிறார்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனிடையே, ஒவ்வொரு ஆண்டும் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு, கார்கில் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளியைக் கொண்டாடினார். இதற்கிடையில், பிரதமர் மோடி 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் எல்லைப் பாதுகாப்புப் படையுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.
இந்நிலையில், இந்த ஆண்டு பிரதமர் மோடி இமாச்சல பிரதேசத்தில் சீனாவுடனான எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடுகிறார்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள லிப்ஷாவுக்கு சென்ற பிரதமர் மோடி, சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் எல்லை போலீசாருடன் தீபாவளியை கொண்டாடி வருகிறார்.
Discussion about this post