WhatsApp Channel
உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆடைகள் மற்றும் பட்டாசுகளை வாங்க உறுதிமொழி எடுப்போம் என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. விழாவை உற்சாகத்துடன் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமிழில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது;-
“இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை, அதர்மத்தின் மீது தர்மத்தின் வெற்றியையும் இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது. இது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அல்லது ‘வசுதைவ குடும்பம்’ என்ற நமது நித்திய தத்துவத்தின் உண்மையான வெளிப்பாடு.
உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் மதம் மற்றும் மொழி வேறுபாடின்றி ஒரே குடும்பமாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் பிற பரிசுகளை வாங்க நாங்கள் உறுதியளிக்கிறோம். அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.”
இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
Discussion about this post