WhatsApp Channel
ஜி20 தலைவர் பதவியை பிரேசில் வெற்றிகரமாக நடத்த இந்தியா முழு ஆதரவை வழங்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
பிரேசில் அதிபர் லூயிஸ் இன்சியோ லுலா டா சில்வா நேற்று பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலை குறித்து தங்களது கவலையை பகிர்ந்து கொண்டனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் பொதுமக்கள் உயிரிழப்பது குறித்து பேசிய அவர்கள், இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
ஜி20 தலைவர் பதவியை பிரேசில் வெற்றிகரமாக நடத்துவதற்கு இந்தியா முழு ஆதரவை வழங்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
‘எக்ஸ்’ இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.
Discussion about this post