WhatsApp Channel
கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக் குழு இஸ்ரேல் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தியது.
போர் 36வது நாளாக தொடர்கிறது.
கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் போன்ற ஆயுதக் குழுக்கள் இஸ்ரேல் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹமாஸ் போராளிகள் 200க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை இஸ்ரேலில் இருந்து காசாவிற்கு கடத்திச் சென்றனர்.
பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கு எதிராக இஸ்ரேல் போரை அறிவித்தது. இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், ஹமாஸ் ஆயுதக் குழு காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி வருகிறது. அதேநேரம் காஸா பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், இஸ்ரேலியப் படைகள் காஸாவுக்குள் நுழைந்து ஹமாஸ் ஆயுதக் குழுவின் பதுங்கு குழிகளைக் கண்டுபிடித்து அழித்து வருகின்றன. இதேவேளை, இன்று 36ஆவது நாளாக யுத்தம் தொடர்கிறது.
இறப்பு எண்ணிக்கை:
கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,405 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இஸ்ரேல் தற்போது புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் கூற்றுப்படி, ஹமாஸின் பயங்கரவாத தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 1400 பேர் கொல்லப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டாலும், 200க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளன. இதன் விளைவாக, மீதமுள்ள 200 பேர் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்று இஸ்ரேல் கூறியது
ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தரை மற்றும் வான்வழி தாக்குதலில் இதுவரை 11 ஆயிரத்து 78 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் நடந்த மோதலில் 182 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது.
Discussion about this post