WhatsApp Channel
இதுவரை நடைபெற்ற லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடைபெற்ற லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
மீதமுள்ள அரையிறுதிக்கு நியூசிலாந்தும் பாகிஸ்தானும் போட்டியிடுகின்றன. இதில் நியூசிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் நியூசிலாந்து 9 ஆட்டங்களில் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அணியின் நிகர ரன் ரேட்டும் (+0.743) நன்றாக உள்ளது.
உலகக் கோப்பை தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. காலை 10.30 மணிக்கு நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. பின்னர் பிற்பகல் 2.00 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது. அதே சமயம் இதில் வெற்றி பெற்றால் எந்த பிரச்சனையும் இல்லாமல் 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறலாம் என்பதால் வெற்றிக்காக இங்கிலாந்து போராடும்.
இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. மேலும் இந்த போட்டிக்கு பிறகு இந்திய அணியை எந்த அணி அரையிறுதியில் சந்திக்கும் என்பது தெரியவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post