WhatsApp Channel
இந்தப் பட்டியலில் 830 இந்திய வீரர்களும், 336 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு டி20 தொடரான ஐபிஎல் 17வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஐ.பி.எல்., அணி நிர்வாகங்கள் விடுவிக்கப்பட்டு தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளது. அமைப்பு அளித்த காலக்கெடு கடந்த மாதம் 26ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்பட்டு தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்பித்தது.
இதையடுத்து இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19ம் தேதி துபாயில் நடக்கிறது. இந்த ஏலத்தில் இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த 1,166 வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் 830 இந்திய வீரர்களும், 336 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், டேரில் மிட்செல் மற்றும் ரச்சின் ரவீந்திரன் ஆகியோர் உலகக் கோப்பையில் சிறந்த வீரர்கள். இவர்களை ஏலம் எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post