WhatsApp Channel
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, டிசம்பர் 3-ம் தேதி உருவான நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து, டிசம்பர் 5-ம் தேதி ஆந்திராவை கரையை கடந்தது.
இந்நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யும்.
Discussion about this post