WhatsApp Channel
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் கடந்த 15ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்கள் குவித்தது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர். அதேபோல், அறிமுக வீரர் சர்ப்ராஸ் கான் 62 ரன்களும், துருவ் ஜூரல் 46 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் க்ராலி 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து அல்லி போப் வந்தார். அவர் 23 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பென் டக்கெட் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஜோ ரூட் 18 ரன்களில் ஜானி பேர்ஸ்டோவ் டக் அவுட்டானார். பின்னர் களம் இறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதேபோல் பென் பொக்ஸ் 13 ரன்களிலும், மற்ற வீரர்கள் குறைவான ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய தரப்பில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அஸ்வின், பும்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்தியா 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தற்போது இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
Discussion about this post