WhatsApp Channel
அனைத்து மதத்தினரும் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தை பயன்படுத்தி வெற்றி உணர்வை வெளிப்படுத்தலாம் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆமதாபாத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர்களை நோக்கி இந்திய ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டதில் எந்த மதமும் இருந்ததாக நான் பார்க்கவில்லை, வெற்றி உணர்வு இருந்ததை பார்க்கிறேன்.நம் நாடு வென்றது என்ற உணர்வுடன் ரசிகர்கள் இதை சொல்கிறார்கள்.
ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தை அனைத்து மதத்தினரும் பயன்படுத்தி வெற்றி உணர்வை வெளிப்படுத்தலாம். இது மதம் அல்ல. மாறாக வெற்றியின் உணர்வையும் மனதின் உணர்வையும் பொறுத்தே அமையும்” என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
Discussion about this post