WhatsApp Channel
தமிழகத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மத்திய மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இது விசாகப்பட்டினத்திலிருந்து கிழக்கே 410 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post