WhatsApp Channel
சென்னையில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களின் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தி.நகர், மந்தைவேலை, புரசைவாக்கம், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் சோதனை நடந்து வருகிறது.
தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனை நடைபெறும் இடங்களில் ஆயுதம் தாங்கிய மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சோதனை நடத்த வாய்ப்பு உள்ளதால், சோதனை முடிந்த பிறகே விவரம் வெளியிடப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post