WhatsApp Channel
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விளவங்கோடு சட்டசபை தொகுதியில் மட்டும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 278, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 141, இதர வாக்காளர்கள் 4 பேர் என மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 423 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்தத் தொகுதியில் மட்டும் 272 வாக்குச் சாவடிகள் உள்ளன. எனவே நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட்டு இந்த வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடத்தப்படும்.
இதனால் இத்தொகுதியை சேர்ந்த 2 லட்சத்து 36 ஆயிரத்து 423 வாக்காளர்கள் மட்டும் தலா இரண்டு ஓட்டுகள், நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு ஓட்டு, சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஒரு ஓட்டு என பதிவு செய்ய உள்ளனர்.
Discussion about this post