WhatsApp Channel
தமிழ்நாடு தவிர எந்த மாநிலத்திலும் முதல்கட்ட தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் அனைத்தும் தமிழகத்தை விட கூடுதல் தொகுதிகளை கொண்ட மாநிலங்கள்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் அனைத்தும் தமிழ்நாட்டை விட குறைவான தொகுதிகளைக் கொண்ட மாநிலங்கள். மற்றவை ஒன்றிரண்டு தொகுதிகளைக் கொண்ட யூனியன் பிரதேசங்கள்.
மேற்குறிப்பிட்ட எந்த மாநிலத்திலும் முதல் கட்ட தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.
அதாவது முதற்கட்டமாக உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் கொண்ட 8 தொகுதிகளும், பீகாரில் 40 தொகுதிகள் கொண்ட 4 தொகுதிகளும், மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகள் கொண்ட 3 தொகுதிகளும், மகாராஷ்டிராவில் 48 தொகுதிகள் கொண்ட 5 தொகுதிகளும் மட்டுமே.
அதேபோல், 25 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 12 தொகுதிகளுக்கும், 29 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், 11 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் ஒரே ஒரு தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது.
39 தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் மட்டும் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டத்தில் அதாவது ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post