WhatsApp Channel
கனடாவில் மக்களின் கருத்து சுதந்திரத்தை அழிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எலோன் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு எதிராக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஸ்ட்ரீமிங் என்பது ஆன்லைன் நிறுவனங்களால் வழங்கப்படும் சேவையாகும். இதன் மூலம் மக்கள் தங்கள் கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும். ஆனால் தற்போது அதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் உலக பணக்காரரும், எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எலோன் மஸ்க் இதற்கு எதிராக எக்ஸ் ஆப்பில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்தச் சட்டத்தின் மூலம் கனடாவில் உள்ள மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அழிக்க அரசு முயற்சிக்கிறது. இது மிகவும் வெட்கக்கேடான விஷயம். எனவே, அதை கைவிட வேண்டும்,” என்றார்.
Discussion about this post