WhatsApp Channel
தென்கிழக்கு ஆசியாவின் அதிவேக ரயில் சேவையை இந்தோனேஷியா தொடங்கியுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவின் முதல் அதிவேக ரயில் சேவையை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ தொடங்கி வைத்தார். இந்த ரயில் தலைநகர் ஜகார்த்தா மற்றும் பாண்டுங் இடையே மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இதனால் தற்போதைய 3 மணி நேர பயண நேரம் 40 நிமிடங்களாக குறையும். 209 மீட்டர் நீளம் கொண்ட இந்த ரயிலில் 600 பேர் வரை பயணம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
75 சதவீத சீன நிதியுதவியுடன் 2015ல் இத்திட்டம் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக ரூ.35 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்ட இந்த திட்டத்திற்கான செலவு தற்போது ரூ.60 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. எவ்வாறாயினும், முழுக்க முழுக்க மின்சாரத்தைப் பயன்படுத்தி ரயில் இயக்கப்படுவதால், கார்பன் வெளியேற்றம் வெகுவாகக் குறையும் என்று அந்நாட்டு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
Discussion about this post