கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் தனது 88வது வயதில் காலமானார்.
வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88), வத்திக்கானில் உள்ள தனது இல்லத்தில் முதுமை காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட காலமாக மருத்துவமனையில் இருந்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார்.
தென் அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப் ஆவார். அவரது மரணம் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.