WhatsApp Channel
போரினால் பாதிக்கப்பட்ட காசாவிற்கு இந்திய அரசு மருத்துவ மற்றும் நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் 3வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ரபா எல்லை வழியாக காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்டன. எவ்வாறாயினும், காசாவில் உள்ள 1.6 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவை என்று WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.
இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதிக்கு இந்திய அரசு சார்பில் மருத்துவ மற்றும் நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
“காசா மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை அனுப்புகிறது. பாலஸ்தீன மக்களுக்காக சுமார் 6.5 டன் மருத்துவ உதவி மற்றும் 32 டன் பேரிடர் நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு IAF C-17 விமானம் எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு புறப்பட்டது.
உயிர் காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சை பொருட்கள், கூடாரங்கள், தார்பாய்கள், சுகாதார கருவிகள், தண்ணீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Discussion about this post