WhatsApp Channel
உமர் அப்துல்லா தனது மேல்முறையீட்டில் தனது மனைவி பயல் அப்துல்லாவிடம் இருந்து விவாகரத்து கோரியிருந்தார்
காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா, அவரது மனைவி பாயல் அப்துல்லாவை பிரிந்துள்ளார். இந்நிலையில், பிரிந்த மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி டெல்லி நீதிமன்றத்தில் உமர் அப்துல்லா வழக்கு தொடர்ந்தார். உமர் அப்துல்லா, தன்னை துஷ்பிரயோகம் செய்வதாகக் கூறி தனது மனைவி பயல் அப்துல்லாவிடம் இருந்து விவாகரத்து கோரினார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், உமர் அப்துல்லாவுக்கு விவாகரத்து வழங்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து உமர் அப்துல்லா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவர் தனது மேல்முறையீட்டில் தனது மனைவி பாயல் அப்துல்லாவிடம் இருந்து விவாகரத்து கோரியிருந்தார். இந்நிலையில் உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா, விகாஸ் மகாஜன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டில் எந்த தகுதியும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
Discussion about this post