WhatsApp Channel
முகக்கவசம் அணிவதையும், கொரோனா தடுப்பூசி போடுவதையும் தீவிரப்படுத்துமாறு சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனால், உலகின் பல நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டன.
உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனால் சிங்கப்பூரில் இதற்கு நேர்மாறாக இருக்கிறது. அதாவது, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுவாசம் தொடர்பான நோய்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. இதனால் அங்குள்ள மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
எனவே, கரோனா தொற்று பரவாமல் தடுக்க, மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களைத் தவிர்க்கவும், முகக் கவசம் அணியவும், கரோனா தடுப்பூசி போடவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த சூழலில், சிங்கப்பூர் மருத்துவமனைகள் நாட்டில் உள்ள கொரோனா நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், சமீபத்திய தொற்று அலைகளைத் தொடர்ந்து தேவைப்பட்டால் அவற்றின் திறனை அதிகரிக்கத் தயாராக இருப்பதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post