WhatsApp Channel
ராமரை கற்பனைக் கதாபாத்திரம் என்று வர்ணித்த காங்கிரஸ் கட்சி, தற்போது ஜெய் ஸ்ரீராம் என்று வணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலம் ரேவாரியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், இன்று உலக அளவில் இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்றும், மக்களின் உதவியால் இது சாத்தியமானது என்றும் கூறினார். ராமர் கற்பனை என்று கூறியவர்களும், அயோத்தியில் கோயில் கட்டுவதை விரும்பாதவர்களும் தற்போது ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுகின்றனர் என்றார்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்ய பல தசாப்தங்களாக காங்கிரஸ் தடைகளை உருவாக்கி வந்ததாகவும், அந்த தடை தற்போது உடைந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
தேசம் மற்றும் நாட்டு மக்களின் நலனை விட ஒரு குடும்பத்தின் நலனை உயர்த்தியதே காங்கிரஸின் சாதனை. 2014ல், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு எனது முதல் கூட்டம் ரேவாரியில் நடைபெற்றது.
பிரதமர் வேட்பாளராக நான் சில உறுதிமொழிகளை வழங்கியிருந்தேன். அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று நாடு விரும்பியது. அது நிறைவேறியுள்ளது. பாஜக தலைமையிலான என்டிபி ஆட்சியை கைப்பற்றும் என்று மக்கள் கூறுகிறார்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி-20 மாநாட்டை மக்களின் ஆசியுடன் இந்தியா வெற்றிகரமாக நடத்த முடிந்தது.
10 ஆண்டுகால ஆட்சியில் பதினொன்றாவது இடத்தில் இருந்த இந்தியா, மக்களின் ஆசியுடன் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற உங்கள் ஆசிகள் தேவை. தற்போது மோடியின் உறுதிமொழி குறித்து உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, மேலும் பிரதமர் மோடி, “மோடியின் உத்தரவாதத்தின் முதல் சாட்சி ரேவாரி.
Discussion about this post