WhatsApp Channel
கச்சத்தீவு திருவிழாவை மீனவர்கள் புறக்கணிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை சிறையில் அடைப்பதை கண்டித்து தமிழக மீனவர்கள் நாளை முதல் போராட்டம் நடத்த உள்ளனர்.
நாளை முதல் மீனவர்கள் படகுகளில் கருப்புக் கொடி ஏற்றி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
வரும் 20ம் தேதி மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மீனவர்கள் பேரணியாக செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.
மூன்று நாட்கள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
Discussion about this post