WhatsApp Channel
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், வர்த்தகம், தொழில்துறை மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், 2047 ஆம் ஆண்டுக்குள் வேளாண்மைத் துறை நாட்டை வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாற்றும்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தை புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் உரையாற்றுகையில்,
லட்சக்கணக்கான இந்தியர்களின் உயிரைக் காப்பாற்றியதற்காக விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், தொழில்நுட்ப உதவியுடனான இ-வேளாண் உற்பத்தி நிதி முயற்சியானது விவசாயிகளின் கிடங்குகளை எளிதாக்கும் மற்றும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற உதவும் என்று கூறினார்.
2047-ம் ஆண்டுக்குள் வேளாண்மைத் துறை வளர்ச்சியடைந்த இந்தியாவாக நாட்டை வழிநடத்தும் என்றார்.
சிறு விவசாயிகள் உட்பட அதிகமான விவசாயிகள் கிடங்குகளைப் பயன்படுத்தி வருமானத்தைப் பெருக்கும் வகையில் கிடங்குகளைப் பதிவு செய்வதற்கான பாதுகாப்பு வைப்புத்தொகை விரைவில் குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
விளைபொருட்களை சேமித்து வைக்கும் விவசாயிகள், மூன்று சதவீத பாதுகாப்பு வைப்புத்தொகைக்கு பதிலாக, 1 சதவீத பாதுகாப்பு வைப்புத்தொகையை மட்டுமே செலுத்த வேண்டும், என்றார்.
Discussion about this post