WhatsApp Channel
தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்வதை விட மேம்படுத்த முடியும் என நான் நம்புகிறேன் என்று அமித் ஷா கூறினார்.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்யவும், அது குறித்த தகவல்களை வெளியிடவும் பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த கட்சிக்கு யார் யார் நிதி கொடுத்தார்கள் என்பதை உலகுக்கு தெரியப்படுத்தும் வகையில் தேர்தல் பத்திரங்களில் தனித்தனி வரிசை எண்களை வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜகவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து அமித்ஷா கூறியதாவது:
இந்திய அரசியலில் கறுப்புப் பணத்தின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக தேர்தல் பத்திரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்வதற்குப் பதிலாக மேம்படுத்தியிருக்கலாம் என்று நான் நம்புகிறேன். ஆனால் அதற்கு எதுவும் செய்ய முடியாது. உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறேன். தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க.வுக்கு ஆதாயம் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏனென்றால் பாஜக ஆட்சியில் உள்ளது. இது மிகப்பெரிய மிரட்டி பணம் பறிப்பு என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இதை அவருக்கு எழுதியது யார் என்று எனக்குத் தெரியவில்லை.
Discussion about this post