WhatsApp Channel
புதுச்சேரியில் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை வரும் 25ஆம் தேதி முதல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டம் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், 2023-24ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மட்டுமே, தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் பின்பற்றப்பட்டது. மற்ற அனைத்து வகுப்புகளும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தில் நடத்தப்பட்டன.
வரும் 2024-25ஆம் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான கல்வியாண்டு காலண்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டு, வரும் கல்வியாண்டு முதல், மத்திய இடைநிலைக் கல்வி வாரிய விதிமுறைகளின்படி, ஏப்ரல் 1ம் தேதி பள்ளிகள் துவங்கி, 2025 மார்ச் 31ம் தேதி வரை தொடரும்.
மாணவர்களுக்கு மே 24 முதல் 31, மே 1 முதல் 31 வரை கோடை விடுமுறையும், ஜூன் 3 முதல் பள்ளிகள் மீண்டும் தொடங்கும். 2024-25ஆம் கல்வியாண்டுக்கான அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை வரும் 25ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. அவ்வாறு கூறுகிறது.
Discussion about this post