WhatsApp Channel
அமலாக்க இயக்குனரகத்தின் விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராக மறுப்பதாக டெல்லி நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.
டெல்லியில் மதுபானக் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதை விசாரித்த அமலாக்க இயக்குனரகம் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி ராஜ்யசபா உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோரை கைது செய்தது.
இந்த மதுக் கொள்கை மீறலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அமலாக்கத்துறை கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்து, 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் கெஜ்ரிவால் சம்மனை ஏற்று ஒருமுறை கூட ஆஜராகாமல் புறக்கணித்தார்.
இந்நிலையில், கெஜ்ரிவால் மீது அமலாக்க இயக்குனரகம் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று நேரில் ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை ஏற்று கெஜ்ரிவால் இன்று நேரில் ஆஜரானார். கெஜ்ரிவால் ஆஜரான பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
Discussion about this post