விஜய் சேதுபதியின் புதிய படத்தில் நாயகியாக சம்யுக்தா மேனன் இணைந்துள்ளார்
பூரி ஜெகந்நாத் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் தபு மற்றும் துனியா விஜய் குமார் ஆகியோர் முன்னதாகவே நடிகர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். தற்போது, கதாநாயகியாக சம்யுக்தா மேனன் ஒப்பந்தமாகி உள்ளார்.
இது, விஜய் சேதுபதி மற்றும் சம்யுக்தா மேனன் முதன்முறையாக ஒரே திரையில் இணைந்து நடிக்கும் திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் தொடங்க உள்ளதுடன், படக்குழு அதற்கான வேலைகளை மேற்கொண்டு வருகிறது.
இத்திரைப்படத்தை பூரி கனெக்ட்ஸ் பேனரில் பூரி ஜெகந்நாத் மற்றும் சார்மி கவூர் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் வெளியான ‘லைகர்’ மற்றும் ‘டவுள் ஐஸ்மார்ட்’ ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்ப்பை ஏமாற்றிய நிலையில், அவர் இந்தப் புதிய முயற்சியில் வெற்றியை நோக்கி உறுதியுடன் செயல்பட்டு வருகிறார்.
Discussion about this post