WhatsApp Channel
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 – சுதந்திர தினத்தன்று 11 குற்றவாளிகளையும் கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுதலை செய்தது.
2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு, குஜராத் மாநிலத்தில் வன்முறை மற்றும் வகுப்புக் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பில்கிஸ் பானு, ஒரு ஆண் மற்றும் ஒரு குழந்தை மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர்.
2008-ம் ஆண்டு மும்பை சிபிஐ இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 11 பேரை குற்றவாளிகள் என அறிவித்தது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி யுடி சால்வி தீர்ப்பு வழங்கினார். 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குஜராத் அரசு 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 11 குற்றவாளிகளை கருணை அடிப்படையில் ஆகஸ்ட் 15, 2022 – சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.
இதன் விளைவாக, ரதிஷாம் ஷா, ஜெஷ்வந்த் சதுர்பாய் நை, கேஷ்பாய் வேதன்யா, பாகபாய் வேதன்யா, ராஜ்பாய் சோனி, ரமேஷ்பாய் சவுகான், ஷைலேஷ்பாய் பட், பிபின் சந்திர ஜோஷி, கோவிந்தபாய் நை, மிதிஷ் பட் மற்றும் பிரதீப் மோதியா ஆகிய 11 குற்றவாளிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். குஜராத் அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது.
குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதை எதிர்த்து பில்கிஸ் பானு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சில பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை கடந்த அக்டோபர் மாதம் நிறைவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், பரபரப்பான இந்த வழக்கில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது, பில்கிஸ் பானுவின் மனு விசாரணைக்கு ஏற்றது என்று கூறிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தது.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவோ அல்லது முன்கூட்டியே விடுதலை செய்யவோ குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் விசாரணை தொடரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Discussion about this post