WhatsApp Channel
ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கு ஆதரவாக செங்கடலில் பயணிக்கும் சரக்குக் கப்பல்களை குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஹமாஸ் ஆயுதக் குழு கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தீவிரவாதத் தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா பகுதி மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கும் இடையே கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.
இதற்கிடையில், ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சிக் குழுவின் ஆயுதக் குழுவான ஹமாஸ் இந்தப் போரில் ஆதரவளித்து வருகிறது. மேலும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர் நிலைகளைக் குறிவைத்து, அமெரிக்காவும், இங்கிலாந்தும் சமீபத்தில் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்க சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரம் இன்னும் வெளியாகவில்லை. கப்பல் தாக்கப்பட்டதை அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளது.
அதேநேரம், காசா பகுதியில் பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலை நிறுத்தும் வரை இஸ்ரேல் செல்லும் கப்பல்கள் மீதும், அரபிக் கடல் மற்றும் செங்கடலில் உள்ள கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்துவோம் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post