WhatsApp Channel
தேவர் ஜெயந்தி விழா மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவில் பங்கேற்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று மதுரை வந்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவ் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் முக்கிய அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தெய்வத்திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் குருபூஜையன்று, பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் ஐயா திருக்கோவிலில், மாண்புமிகு கோவா மாநில முதலமைச்சர் திரு டாக்டர். பிரமோத் சாவந்த்
அவர்கள் மற்றும் தமிழக பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் சென்று தெய்வத்திருமகனாரை வணங்கினோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
தேவர் ஜெயந்தி விழா மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவில் பங்கேற்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று காலை மதுரை வந்தார். அவருடன் மாண்புமிகு கோவா மாநில முதலமைச்சர் திரு டாக்டர். பிரமோத் சாவந்த் அவர்கள் மற்றும் தமிழக பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன், தொண்டர்கள் வரவேற்றனர்.
சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர். குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்துப் போராடி, ஒரு பெரும் சமூகத்தின் விடுதலைக்கு முக்கியப் பங்காற்றியவர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள், பட்டியல் சமுதாய மக்களும் சென்று வழிபட உரிமை பெற்றுத் தந்தவர்களில் முக்கியமானவர்.
அரசியல் மற்றும் ஆன்மீகத்தில் மாபெரும் புரட்சி செய்த ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் புகழ் போற்றி வணங்குகிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
Discussion about this post