WhatsApp Channel
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் திபேஸ் சோனி, தெலுங்கானாவில் வணிகர்களிடம் மோசடி செய்ததாக ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.
தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நவம்பர் 7ம் தேதி தொடங்குகிறது. தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 25ம் தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் கான்பூர் சட்டசபை தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக திபேஷ் ஷோனி போட்டியிடுகிறார். தங்க வியாபாரியான இவர் தெலுங்கானாவுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
தெலுங்கானா மாநிலத்தில் தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரத்தில் ஈடுபட்ட சிலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட திபேஷ் சோனி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திபேஷ் சோனி மீது மொத்தம் 3 வழக்குகள் நிலுவையில் இருந்தன.
இந்நிலையில், ஐதராபாத் திரும்பிய திபேஷ் சோனியை, அவரது தந்தை தொடர்பு கொள்ள முடியாமல், ராஜஸ்தான் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ராஜஸ்தான் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் தான் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் போலீஸ் காவலில் திபேஷ் சோனி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, திபேஷ் சோனி மீதான மோசடி வழக்குகளின் விவரங்களை தெலுங்கானா போலீசார் ராஜஸ்தான் போலீசாரிடம் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தானில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும் வெற்றி பெற்று வருகிறது.
Discussion about this post