WhatsApp Channel
உக்ரைனில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தது. உலகமே இதைக் கண்டித்தது. இருப்பினும், போர் ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்தது.
இந்தப் போரில், கிழக்கு உக்ரைன் நகரான வோல்னோவாகாவை ரஷ்யா கைப்பற்றியது. இந்த நகரம் மார்ச் 2022 முதல் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளது.இந்நிலையில், உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் வழக்கறிஞர் அலுவலகம் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
அவர்களில் பலர் படுக்கையில் சுடப்பட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஒருவரையொருவர் கட்டித்தழுவிக்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சுவர்களில் ரத்தக்கறைகள் காணப்பட்டன.
இந்தச் சம்பவத்தில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் படைகள் அவர்களைக் கொன்று குவித்ததை உக்ரைன் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ரஷ்ய வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில், இராணுவ சீருடையில் ஆயுதம் ஏந்திய நபர்கள், குடும்பத்தை காலி செய்யுமாறு மிரட்டினர். ஆனால் வீட்டு உரிமையாளர் மறுத்துவிட்டார். இதன் விளைவாக, அவர்கள் குடும்பத்தை அச்சுறுத்தி தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக உக்ரைனின் டோனெட்ஸ்க் பிராந்தியத்தின் வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post