WhatsApp Channel
இங்கிலாந்தில் பணிபுரிந்து வந்த, கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் அருகே நன்னியூர்புதூர், ந.குளத்தூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் சகோதரர் கனகராஜ், கடந்த ஆகஸ்ட் மாதம், துரதிருஷ்டவசமாக மரணமடைந்து விட்டார்.
இன்று அவரது இல்லத்துக்கு நேரில் சென்று, கரூர் மாவட்டத் தலைவர் அண்ணன் திரு வி.வி.செந்தில்நாதன் அவர்கள் முன்னெடுத்து, Indian National Student Association உறுதுணையோடு சேகரித்த 5.8 லட்சம் ரூபாய் நிதியை, மறைந்த சகோதரர் கனகராஜ் அவர்களது தாயாரிடம் காசோலையாக வழங்கினோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
சகோதரர் கனகராஜ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, எதுவும் உடனடி ஆறுதல் தராது எனினும், காலம் அவர்களை இந்தத் துயரிலிருந்து விரைவில் மீட்டெடுக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிவு.
Discussion about this post