WhatsApp Channel
திமுகவினர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷமிடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகீர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மன் என் மக்கள் நடைபயணம். அதன்பின் சேந்தமங்கலத்தில் நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது பேசிய அவர், அடித்தட்டு மக்களுக்கான ஆட்சி தமிழகத்தில் தற்போது நடைபெறவில்லை. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் ஆளப்படுகிறது. அதுதான் ஜனநாயகம் என்று நினைக்கிறார்கள்.
திமுக தலைமையிலான அரசு பழங்குடியின மக்களுக்கு எதிரானது. மத்திய அமைச்சரவையில் 11 பழங்குடியின அமைச்சர்கள் உள்ளனர். ஆனால், தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில் ஒருவர் கூட பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் இல்லை. திமுக தனது தேர்தல் அறிக்கையில் 3.50 லட்சம் பேருக்கு வேலை வழங்குவதாக அறிவித்திருந்தது.
ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழக அரசு 12,000 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கியது. திமுக தலைமையிலான அரசு படித்த இளைஞர்களுக்கு எதிரானது. உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலை வாய்ப்பு வழங்கியுள்ளார்.
தமிழக முதல்வரைப் பொறுத்தவரை குடும்பம் மட்டும்தான் நன்றாக இருக்க முடியும் என்று நினைக்கிறார். பாஜக ஆட்சி அடித்தட்டு மக்களுக்கான ஆட்சி. திமுக ஆட்சி மகன், மருமகன் ஆட்சி. திமுக ஊழல் பற்றி பேசக்கூடாது. திமுக அமைச்சர்கள் 11 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியின் போது, திமுக உறுப்பினர்கள் பாகிஸ்தான் ஜெர்சி அணிந்து பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டனர். வாக்கு வங்கி வேண்டும் என்பதற்காகவே திமுக தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது. இதுவரை இல்லாத வகையில் ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். தமிழகம் வன்முறைக் களமாக மாறியுள்ளது. இவ்வாறு அண்ணாமலை பேசினார். கடந்த 25ம் தேதி மாலை சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை மீது கருக்கா வினோத் பெட்ரோல் குண்டை வீசினார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
Discussion about this post