WhatsApp Channel
சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முதல் தற்போது வரை தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகளில் வெள்ளம், வீடுகளுக்குள் தண்ணீர், போக்குவரத்து பாதிப்பு என பல வழிகளில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய போதிய நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
மீண்டும் கனமழை தொடங்கியுள்ளதால், வரும் நாட்களில் சென்னை மாநகரின் கதி என்ன? பயமும் பதட்டமும் இருக்கிறது. மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை ஆய்வு செய்து தேவையான மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Discussion about this post