WhatsApp Channel
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த விசாரணையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உள்ளிட்டோர் கரூரில் உள்ள வீடுகளில் சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை கூட்டு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து செந்தில் பாலாஜியை ஜூன் 14ம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தது.
செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.
செந்தில் பாலாஜியின் மனுவுக்கு அமலாக்க இயக்குனரகம் பதிலளிக்க சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளிவருவதற்கு அமலாக்க இயக்குனரகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதனிடையே வழக்கு விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Discussion about this post