WhatsApp Channel
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தங்க நகைகள் தமிழகம் கொண்டு வரப்பட உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் தண்டனை விதித்தது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருந்த நிலையில், உடல்நலக்குறைவால் ஜெயலலிதா மரணமடைந்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் தற்போது கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நீதிமன்றத்தில் உள்ளன.
இந்நிலையில் ஜெயலலிதாவின் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் தமிழகம் கொண்டு வரப்பட உள்ளது. இதில் 6 பெட்டகங்களில் 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளன. தமிழக உள்துறை செயலர் மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராக பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை முடிந்து குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனை நிறைவடைந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் கர்நாடகாவுக்கு தமிழக அரசு வழக்கு கட்டணமாக ரூ.5 கோடி வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post