WhatsApp Channel
தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி உள்ளது. இதில் பா.ம.க., அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொள்கின்றன.
இதில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்தெந்த இடங்கள் முடிவு செய்யப்படவில்லை. வேலூர் தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. த.மா.கா., மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பான பாஜக உயர்நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் 2வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேர்தல் அதிகாரி அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Discussion about this post