WhatsApp Channel
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று சென்னை வருகிறார்.
மிக்ஜம் புயல் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி கடந்த 5 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால், பேரிடரில் இருந்து சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
இதனிடையே, ‘மிக்ஜம்’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாளை சென்னை வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் முடிச்சூர், வரதராஜபுரம், மேற்கு மாம்பலம், சென்னை திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளுக்கு செல்ல உள்ளார்.
Discussion about this post