WhatsApp Channel
நியூயார்க் மாநில கவர்னர் கேத்லீன் ஹோகெல் தீபாவளியன்று நியூயார்க்கில் உள்ள பொதுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழும் நியூயார்க் மாநிலத்தில் தீபாவளி, இந்தியப் பண்டிகை விடுமுறையாகக் கருதப்படுகிறது.
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒவ்வொரு ஆண்டும் இந்திய நாட்காட்டியின் எட்டாவது மாதத்தின் 15வது நாளில் இந்த விடுமுறை அளிக்கப்படும்.
உலகெங்கிலும் உள்ள பண்டிகைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் கொண்டாடவும் இது எங்கள் மாணவர்களுக்கு வாய்ப்பாக இருக்கும் என்று ஹோகல் கூறினார்.
நியூயார்க் மாநிலத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். நியூயார்க் அமெரிக்காவின் சிறந்த கல்வி மாநிலங்களில் ஒன்றாகும்.
மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய வம்சாவளி உறுப்பினருமான ஜெனிபர் ராஜ்குமார் கொண்டு வந்த இந்த மசோதா, தற்போது கவர்னரால் அங்கீகரிக்கப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post