WhatsApp Channel
புதுக்கோட்டையை சேர்ந்த முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீதான சொத்து குவிப்பு வழக்கு டிச.2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் விஜயபாஸ்கர் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.
அதன்பின், டிச., 2ம் தேதிக்கு வழக்கு விசாரணை நடத்தப்படும் என நீதிபதி பூர்ணாஜெயா ஆனந்த் உத்தரவிட்டார்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், வருமானம் ரூ. 35.79 கோடி சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் 2021ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து, கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
Discussion about this post